Mahatma Gandhi History in Tamil | மகாத்மா காந்தி வாழ்க்கை வரலாறு

    

    காத்மா காந்தி’ என்றும் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என்றும் இந்திய மக்களால் அன்போடு அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய சுதந்திரப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். மகாத்மா காந்தியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம்.



Click here for open PDF



Dheeran Chinnamalai History in Tamil | தீரன் சின்னமலை வாழ்க்கை வரலாறு

வீரம் விளைந்த நம் தமிழ் மண்ணில் பிறந்து, நாட்டின் விடுதலைக்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்த மாமனிதர்களில் ஒருவர் தீரன் சின்னமலை. ‘தீர்த்தகிரி கவுண்டர்’ என்றும், ‘தீர்த்தகிரி சர்க்கரை’ என்றும் அழைக்கப்பட்டார் தீரன் சின்னமலை அவர்கள். வெள்ளையர்களுக்கு எதிராக தனது இறுதி மூச்சு வரை அடிபணியாமல், அவர்களை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தவர்.

பல்வேறு போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்.  தைரியமும் விவேகமும் கலந்த போர் முறைகளைத் தனது படைகளுக்குக் கற்றுத் கொடுத்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்து, ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியை அடியோடு ஒழிக்க எண்ணியவர். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் இணைந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்தவர்.

கொங்கு மண்ணில் தோன்றி, வீரத்திற்கு அடையாளமாக  தான் மறைந்தாலும் தனது புகழ் எப்போதும் அழியாமல் நிலைப்பெற்றிருக்குமாறு செய்த தீரன் சின்னமலை அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் ஆங்கிலேயர்களுக்கு  எதிரான போர்கள் பற்றி வாருங்கள் கண்போம்.

தீரன் சின்னமலையின் தாேற்றம் 

தீரன் சின்னமலை அவர்கள், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் காங்கயத்திற்கு அருகிலுள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ‘பழையக்கோட்டை மன்றாடியார் பட்டம்’ பெற்ற மதிப்புமிகு குடும்பத்தில்  ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதியருக்கு மகனாக ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி, 1756 ஆம் ஆண்டில் பிறந்தார். தீரன் சின்னமலை அவருக்குப் பெற்றோரிட்ட பெயர் தீர்த்தகிரி கவுண்டர் என்பதாகும்.

ஆரம்பகால வாழ்க்கை 

தீரன் சின்னமலை அவர்கள் தனது இளம் வயதிலேயே போர்க்கலைகளான சிலம்பு, வில்வித்தை, குதிரையேற்றம் மட்டுமல்லாமல் நவீன போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். தற்காப்புகலைகள் அனைத்திற்கும் மொத்த உருவமாக விளங்கிய தீரன் சின்னமலை அவர்கள் தான் கற்ற கலைகள் அனைத்தையும் தன் நண்பர்களுக்கும் கற்றுக் கொடுத்து, அவரது தலைமையில் இளம்வயதிலேயே ஓர் படையைத் திரட்டினார். அதுமட்டுமல்லாமல் கொங்குப்பகுதியில் குடும்ப மற்றும் நிலப்பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவந்தார்.

‘தீரன் சின்னமலை’ பெயரமைந்த காரணம்

தீர்த்தகிரி கவுண்டர் அவர்களின் பிறப்பிடமான கொங்கு நாடு, மைசூர் மன்னர் அவர்களின் ஆட்சியில் இருந்தது, திப்புவின் திவான் ‘முகம்மது அலி’ என்பவரால் வரி வசூலிக்கப்பட்டு அந்நாட்டின் வரிப்பணம், அவரது அண்டைய நாடான சங்ககிரி வழியாக மைசூர் அரசுக்கு எடுத்துச் செல்லப்படும். 

ஒருநாள், தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்ற தீர்த்தகிரி, திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரம்பிக்கொண்டிருந்த போது அவ்வரிப்பணத்தைப் பிடுங்கி, ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்தார். இதைத் தடுத்த முகம்மது அலி கேட்ட போது, “சிவன்மலைக்கும், சென்னிமலைக்கும் இடையில் உள்ள ஓர் சின்னமலை பறித்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்” என்று சொல்லி அனுப்பினார். அதன் பிறகே, அவர் ‘தீரன் சின்னமலை’ என்று அழைக்கப்பட்டார்.

அவமதிப்புக்குள்ளான திவான் சின்னமலைக்கு தக்க பாடம் கற்பிக்க ஒரு படையை அனுப்பினார். அதனை எதிர்த்து தீரன் சின்னமலையின் படையும் போரிட்டன. இருபடைகளும் நொய்யல் ஆற்றங்கரையில் மோதின. இதில் சின்னமலையே வெற்றிபெற்றார்.

தீரன் சின்னமலை - திப்பு சுல்தான் கூட்டணி

தீரன் சின்னமலை அவர்கள் வளர வளர நாட்டில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் தொடர்ந்து வளர்ந்தது. இதில் சிறிதும் விருப்பமில்லாத சின்னமலை, ஆங்கிலேயர்களை கடுமையாக எதிர்த்தார். அந்த சமயத்தில், அதாவது டிசம்பர் 7ஆம் தேதி, 1782 ஆம் ஆண்டு மைசூர் மன்னர் மரணமடைந்ததால், அவரது மகனான திப்பு சுல்தான் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றார். திப்பு சுல்தானும்  ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை ஒட்டுமொத்தமாக அழிக்க எண்ணினார். 

இதுவே, தீரன் சின்னமலைக்கும் பெரும் சாதகமாக அமைந்தது. ஆகவே, தீரன் சின்னமலை அவர்கள் தனது நண்பர்களோடு ஒரு பெரும் படையைத் திரட்டி, மைசூர் மன்னர் திப்பு சுல்தானுடன் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட முற்பட்டார். ஏற்கனவே, திப்புவின் தந்தையை ஒருமுறை எதிர்த்த நிகழ்வையும், அவரது வீரத்தையும் தீரத்தையும் பற்றி அறிந்த திப்பு சுல்தான், அவருடன் கூட்டணி அமைத்தார். அவர்களின் கூட்டணி, சீரங்கப்பட்டணம், மழவல்லி மற்றும் சித்தேசுவரம் போன்ற இடங்களில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடந்த மூன்று மைசூர் போர்களிலும் ஆங்கிலேயர்களின் படைகளுக்குப் மாபெரும் சேதத்தை விளைவித்து, வெற்றியை கைப்பற்றியது.

நான்காம் மைசூர் போர்

மூன்று முறை நடந்த மைசூர் போர்களிலும், திப்புசுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு கோபமடைந்த ஆங்கிலேயர்கள், பலவிதமான புதிய போர் முறைகளைக் கையாளத் திட்டம் வகுத்தனர். இதன் காரணமாக, திப்பு சுல்தான், மாவீரன் நெப்போலியனிடம், நான்காம் மைசூர் போரின்போது தங்களுக்கு உதவிப் புரியக் கோரி, தூது அனுப்பினார். பிரெஞ்சுக்காரர்களால் பயிற்சியளிக்கப்பட்ட தீரன் சின்னமலை கொங்குமண்டலத்தைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு திப்புவுடன் இணைந்து துணிச்சலுடனும், வீரத்துடனும் அயராது போரிட்டனர். துரதிஷ்டவசமாக, “கன்னட நாட்டின் போர்வாள்” என அழைக்கப்படும் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் அவர்கள், நான்காம் மைசூர் போரில், மே மாதம் 4 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் போர்க்களத்திலே வீரமரணமடைந்தார்.

சின்னமலையின் வெற்றிப்பயணங்கள்

திப்பு சுல்தான் அவர்களின் இறப்பிற்கு பிறகு கொங்கு நாட்டில் ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவர்கள் அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்து கடுமையாக போராடினார். எனவே அவ்விடம் ‘ஓடாநிலை’ என்றழைக்கப்படுகிறது.

திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் விதமாக, தீரன் சின்னமலைக்கு சொந்தமான சிவன்மலை – பட்டாலிக் காட்டில் அவரது வீரர்களுக்குப் பயிற்சி கொடுத்து, பிரெஞ்சுக்காரர்களின் உதவியுடன் பீரங்கிகள் போன்ற நவீன போர் ஆயுதங்களையும் தயாரித்தார். பின்பு, 1799ல் தீரன் சின்னமலை தனது படைகளைப் பெருக்கும் விதமாக, திப்பு சுல்தானிடம்  பணியாற்றிய சிறந்த போர்வீரர்களான அப்பாச்சி மற்றும் தூண்டாஜிவாக் போன்றவர்களை தனது படையில் சேர்த்ததோடு மட்டும் நில்லாமல், தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து, அருகில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஜூன் மாதம் 3 ஆம் தேதி, 1800 ஆம் ஆண்டில், லெஃப்டினன்ட் கர்னல் கே. க்ஸிஸ்டரின் கம்பெனியின் 5 ஆம் படைப்பிரிவை தரைமட்டமாக்க எண்ணிய அவர், கோவைக்கோட்டையைத் தகர்க்கத் திட்டமிட்டார். “சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாத ஒரே காரணத்தால்”, கோவைப்புரட்சி தோல்வியை சந்தித்தது. 

1801ம் ஆண்டு, பிரெஞ்சுக்காரரான கர்னல் மாக்ஸ் வெல் தலைமையில் ஆங்கிலேயர்களை பவானியில் உள்ள காவிரிக்கரையில் எதிர்த்த அவர், வெற்றிப் பெற்றார். அந்த வெற்றியைத் தொடர்ந்தாற்போல், 1802ல் சிவன் மலைக்கும் சென்னிமலைக்குமிடையே நடந்த போரில் சிலம்பமாடி ஆங்கிலப்படையைத் தவிடுபொடியாக்கினார். தீரன் சின்னமலை அவர்கள் பிடிபடாமலிருக்க கொரில்லாப் போர் முறைகளைக் கையாண்டார். 1803ல் அறச்சலூரில் உள்ள கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையை கையெறிகுண்டுகள் வீசி தரைமட்டமாக்கினார்.

தீரன் சின்னமலையின் இறுதி வாழ்க்கை  

ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்வியடையச் செய்து, அவர்களின் தலைகுனிவிற்கு காரணமாக அமைந்த தீரன் சின்னமலையை சூழ்ச்சியால் தீர்த்துக் கட்ட எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாவீரனையும் மற்றும் அவரது சகோதரர்களையும் கைது செய்தனர். அவர்களை, சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தனர்.   ஆங்கிலேயர்களின் ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்டபோது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர். 

தீரன் சின்னமலையின் மறைவு

ஜூலை 31, 1805 அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் தீரன் சின்னமலையும் அவரது சகோதர்களும் தூக்கிலிடப்பட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீரமரணமடைந்தார். அவர் இன்றளவும் பேசப்படுகின்றார் என்றால் “அவர் விதைத்த விதை வழி வந்தவர்கள் பெற்ற வெற்றியே” ஆகும்.

தீரன் சின்னமலை அவர்களின் வீரதீர செயல்களை போற்றும் விதமாக

  1. தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.

  2. ஓடாநிலையில் சின்னமலை அவர்களின் நினைவு மணிமண்டபம் உள்ளது.

  3. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குத் ‘தீரன் சின்னமலை மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  4. இந்திய அரசின் தபால்தந்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை, ஜூலை மாதம் 31 ஆம் தேதி 2005 ஆம் ஆண்டில், ‘தீரன் சின்னமலை அவர்களின் நினைவு அஞ்சல் தலையை’ வெளியிட்டது.

 


திருபாய் அம்பானி வாழ்க்கை வரலாறு | Dhirubhai Ambani History in Tamil

 

     திருபாய் அம்பானி 


     மும்பையில் ஒற்றை அறைகொண்ட மச்சு வீட்டில் குடியிருந்த ஒருவர், தான் மரணிக்கையில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்போடும், உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராகவும் உயருவார் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

     வெறும் 50,000 ரூபாய் முதலீட்டில் தொழில்துவங்கப்பட்டுஇன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாய் உயர்ந்து நிற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தை துவக்கி, மிகப்பெரும் தொழிற்புரட்சிக்கு வித்திட்ட திருபாய் அம்பானி’ என அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ இந்தியாவின் நவீனத் தொழில்துறை முன்னோடிகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். 

     மும்பையில் ஒரு துணி வியாபாரியாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்திய வர்த்தக உலக ஜாம்பவான்’ எனப் புகழ் பெற்றவர். 1982 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில் மாபெரும் தொழிலதிபராக விளங்கிய இவர், 1996, 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில், ஆசியா வீக் இதழ் வெளியிட்ட ‘பவர் – 50 ஆசியாவின் மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராகவும்’இந்திய வணிக அமைப்புகளின் கூட்டமைப்பின் மூலம் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த மனிதராகவும்’ தேர்வு செய்யப்பட்டார். ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி, தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரத்தை அளவிடக்கூடிய அளவில், தன்னுடைய வர்த்தகப் பங்குகளை உயர்த்தி, பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, திருபாய் அம்பானி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை பற்றி வாருங்கள் காண்போம்.

சோதனயை சாதனையாக்கியவர்

     தனது 16 வயதிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார் அம்பானி. இதனால் இவரது வலது கரம் செயலிழந்தது. இவர் என்றுமே இயலாமை என்ற வார்த்தையைப் பற்றி நினைத்தது இல்லை. தனது குறைகளை துச்சமாய் நினைத்து, வெற்றியை மட்டும் தனது இலக்காய் நிர்ணயித்துப் பயணித்தார். “உன் கனவுகளை நீ நனவாக்கத் தவறினால், பிறர் அவர்களது கனவுகளை நிறைவேற்ற உன்னைப் பயன்படுத்திக் கொள்வார்கள்” என்று கூறிய அம்பானி, தனது கனவுகளை விரைந்து நனவாக்கினார்.

ஆனால் தொடர்ந்து கனவு காண்பதை மட்டும் அவர் நிறுத்தவேயில்லை.

பிறப்பு

     திருபாய் அம்பானி அவர்கள், 1932 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம் சோர்வாத் அருகிலுள்ள “குகஸ்வாடாவில்”, ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென் என்பவருக்கும் மகனாக ஒரு நடுத்தர மோத் குடும்பத்தில் பிறந்தார்.

பிறந்த ஆண்டு: 28 டிசம்பர், 1932

பிறந்த இடம்: குஜராத் மாநிலத்திலுள்ள குகஸ்வாடா, இந்தியா

பணி: தொழிலதிபர்

இறந்த ஆண்டு: ஜூலை 06, 2002

ஆரம்ப வாழ்க்கை

   ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பிறகு தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஏமனுக்கு சென்று ஏ.பெஸி & கோ நிறுவனத்தில் சிறிது காலம் வேலைப் பார்த்தார். அந்நிறுவனத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி வந்த அவர், பத்தாண்டுகள் கழித்து இந்தியா திரும்பினார். பின்னர், தன்னுடன் ஏமனில் வேலைப்பார்த்து வந்த சமபக்லால் தமானி என்பவருடன் இணைந்து, ‘மஜின்’ என்ற நிறுவனத்தை மஸ்ஜித் பந்தரில் உள்ள நரசினதா என்ற இடத்தில் ஆரம்பித்தார். இந்நிறுவனம் முதலில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியும், மிளகாய் ஏற்றுமதியும் செய்யத் துவங்கியது. விலையேற்றங்களை முன்னரே கணித்து அதற்கு ஏற்றார்போல் செயல்படுவதில் இவர் வல்லவர். சற்றே நிதானமாக வியாபாரம் செய்பவரான தமானி, அம்பானிக்கு ஈடுகொடுக்க முடியாததால் மஜின் கூட்டு நிறுவனம் பிரிய நேரிட்டது. அப்பிரிவே ரிலையென்ஸ் என்னும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்திற்கு வித்திட்டது.

வெற்றியை நோக்கிய பயணம்

     1970 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், துணி வியாபாரத்தில் நல்ல லாபம் இருப்பதை உணர்ந்த அவர், தன்னுடைய முதல் நூற்பாலையை அகமதாபாத்தில் உள்ள நரோதாவில் 1977 ஆம் ஆண்டு துவங்கினார். விமல் என்னும் பெயரில் துணிகளை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், வளர்ச்சியுற்ற நாடுகளின் தர அடிப்படையிலும் கூட மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இதனால், 1977 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 55000-க்கும் மேற்பட்ட சிறு முதலீட்டாளர்கள், ரிலையன்ஸின் தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டை வாங்கினர். இதனால், நாளுக்கு நாள் சிறு முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக இது மாறியது. குறிப்பாக சொல்லப்போனால், 1982 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் பங்கு சந்தையில் தன்னுடைய பங்குகளின் விலையை பன்மடங்கு அதிகப்படுத்தி, ‘பங்கு சந்தைகளின் முடிசூடா மன்னனாக’ விளங்கினார்.

   பல பிரச்சனைகள் வந்தாலும், முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படத் துவங்கிய அவர், தொடர்ந்து தன்னுடைய வணிகத்தை விரிவுப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, மின்சாரம், சில்லரை விற்பனை, துணி உற்பத்தி, உள்கட்டமைப்பு சேவைகள், மூலதனச் சந்தைகள், சரக்குப் போக்குவரத்து எனப் பல தொழில் அமைப்புகளை உருவாக்கி, மாபெரும் வளர்ச்சிப் பாதையில் தன்னுடைய வர்த்தக நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

குடும்ப வாழ்க்கை

    திருபாய் அம்பானி அவர்கள், கோகிலா பென் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, முகேஷ் மற்றும் அனில் என இரண்டு மகன்களும், நிதா கோத்தாரி மற்றும் நினா சல்கோகர் என இரண்டு மகள்களும் பிறந்தனர்.

தன்னலத்திலும் பொதுநலம்

    அம்பானி தான் மட்டும் உயர வேண்டும் என்று நினைத்தவரல்ல. தன் நிறுவனத்தின் பங்குதாரர்கள் முதற்கொண்டு பணிபுரியம் ஊழியர்கள் வரை அனைவருக்கும் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுத்தவர் அம்பானி. ஊழியர்களின் சம்பளத்தை சீராக உயர்த்திக்கொண்டே இருப்பார். 1986ல் இவர் நடத்திய பங்குதாரர்கள் மாநாட்டிற்குஉலகமே வியந்து பார்க்கும் வகையில் சுமார் 30,000 பங்குதாரர்கள் பங்கேற்று பிரம்மிக்கவைத்தனர். பாலியஸ்டர் உற்பத்தியில் இவர் எடுத்த முயற்சிகள் பெரும் லாபத்தை ஈட்டியது. இதனால் ‘பாலியஸ்டர் பிரின்ஸ்’ என்று அழைக்கப்பட்டார். 1990களுக்குப் பிறகு ரிலையன்ஸ் கண்டதோ அசுர வளர்ச்சி. டெக்ஸ்டைல் மட்டுமல்லாது பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என ஒவ்வொரு துறையிலும் கால்பதித்தது ரிலையன்ஸ் நிறுவனம். கால்பதித்த ஒவ்வொரு துறையிலும் விருட்சமடைந்து இன்று உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் சக்தியாய் வளர்ந்து நிற்கிறது ரிலையன்ஸ்.

 இறப்பு

    உலக வணிக சந்தையில் ஒரு பெரும் இடம்பிடித்த ரிலையன்ஸை தனது ஒற்றை மூளையால் செதுக்கிய திருபாய் அம்பானி, தனது மூளை ஒத்துழைக்காமல் போக மீண்டும் வலிப்பு ஏற்பட்டு தனது 69வது வயதில் 2002-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாள் இயற்கை எய்தினார்.

    உழைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை என அனைத்தையும் தன்னுடைய முன்னேற்றத்தின் மூலதனங்களாக சமர்பித்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்னும் மாபெரும் தனியார் நிறுவனத்தை உருவாக்கி, இந்தியாவை மற்ற நாடுகள் எல்லாம் வியப்போடு பார்க்கிற வகையில், வணிகத்தில் மாபெரும் புரட்சிக் கண்டவர் திருபாய் அம்பானி அவர்கள். குறிப்பாக சொல்லப்போனால், திறமையும் உழைப்பும் தான் முக்கியமான விஷயம் எனக் கூறிய திருபாய் அம்பானி, இன்று சுயமாகத் தொழில் செய்யும் ஒவ்வொருவரின் வழிகாட்டியாகத் திகழ்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.